10:05 PM -
பிரதிபலிப்புகள்
No comments
பிரதிபலிப்புகள்
No comments
இன்று சுதந்திர தினம் !
இன்று சுதந்திர தினம்...
அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில்
ஆசிரியர்களும், அதிகாரிகளும் தேசியக்கொடியை ஏற்றி
நாட்டிற்கு மரியாதை செலுத்தி, இனிப்புகளை வழங்கி இப்பெரும் நாளை கொண்டாடுவது வழக்கமே !!!
வருடத்தில் இரு நாட்களில் மட்டுமே காணக்கிடைக்கும் அற்புதக் காட்சி !
கண்டிப்பாக பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியரோ அல்லது முதல்வரோ சுதந்திரம் பெறப் போராடியவர்களையும், அவர்கள் அனுபவித்த துயரங்களையும் நினைவுகூர்வது ஒரு சம்பிரதாயம் !
இதிலும் ஒரு நடைமுறை உண்டு..
சொற்பொழிவுக்குப் பின் தான் இனிப்புகள் வழங்கப்படும்.
முன்னமே வழங்கிவிட்டால்,
கட்டிடங்கள், மரம், செடிகொடிகளுடன் தான் அவர்கள் பேச முடியும். ஏனெனில் அவைகளால் இடம்பெற இயலாதல்லவா? ஒருவேளை இயன்றால் அவையும் நகர்ந்துவிடக் கூடும்...
மாணவர்களை உங்கள் பேச்சை கேட்டு அஞ்சி ஓட வைக்காதீர்கள். வெறுப்போடு அமரவைத்து திணிக்காதீர்கள்.
தயவுகூர்ந்து, இந்த மலட்டுப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியை இங்கே வாசிக்காதீர்கள்.
இந்நாளிலாவது அவர்கள் மனதில் புதிதாய் நான்கு விதைகளை தூவுங்கள்.
ஒரு முதியவர் எப்போதும் தன் பையில் நல்ல விதைகளை வைத்துக்கொண்டே இருப்பாராம்.
எங்காவது வெற்றிடங்களைப் பார்க்க நேர்ந்தால்,
சில விதைகளை எடுத்துத் தூவி விடுவாராம்.
ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டால்,
இன்று வெறுமையாக இருக்கும் இந்த இடத்தில் நான் நல்விதைகளை தூவி விட்டேன்..
என்றாவது ஒருநாள் நல்மரங்கள் வேர்விட்டெழக் கூடும் என்பாராம்.
அதுபோலத்தான் குழந்தைகளாக இருக்கும் மாணவர்களின் மனமும். இன்று நீங்கள் விதைக்கும் எண்ணங்களே நாளை மனதில் வேர்பிடித்து வளரும்.
வெறுமனே பழங்கதை பேசாமல், உண்மை நிலையை உணர வையுங்கள். ஒரு நல்ல மனிதனாய் எப்படி வளரவேண்டும் என்று வழிகாட்டுங்கள்.
அதுவே நாட்டின் நல்ல எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்.
”வியாபாரம் செய்ய வந்தவர்கள்
அரசியல் நடத்தினார்கள்
அரசியல் நடத்த வந்தவர்கள்
வியாபாரம் செய்கிறார்கள்
இரண்டிலும் நட்டப்பட்டது மட்டும்
நாம்தானே இந்தியனே !”
என்ற வைரமுத்துவின் கவிதையையும் அவசியம் நினைவு கூறுங்கள். இனியாவது தேசியக்கொடி சுதந்திரமாய் பறக்கட்டும்.
இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் !
நேசிக்கப் பழகுவோம் !!!
அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில்
ஆசிரியர்களும், அதிகாரிகளும் தேசியக்கொடியை ஏற்றி
நாட்டிற்கு மரியாதை செலுத்தி, இனிப்புகளை வழங்கி இப்பெரும் நாளை கொண்டாடுவது வழக்கமே !!!
வருடத்தில் இரு நாட்களில் மட்டுமே காணக்கிடைக்கும் அற்புதக் காட்சி !
கண்டிப்பாக பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியரோ அல்லது முதல்வரோ சுதந்திரம் பெறப் போராடியவர்களையும், அவர்கள் அனுபவித்த துயரங்களையும் நினைவுகூர்வது ஒரு சம்பிரதாயம் !
இதிலும் ஒரு நடைமுறை உண்டு..
சொற்பொழிவுக்குப் பின் தான் இனிப்புகள் வழங்கப்படும்.
முன்னமே வழங்கிவிட்டால்,
கட்டிடங்கள், மரம், செடிகொடிகளுடன் தான் அவர்கள் பேச முடியும். ஏனெனில் அவைகளால் இடம்பெற இயலாதல்லவா? ஒருவேளை இயன்றால் அவையும் நகர்ந்துவிடக் கூடும்...
மாணவர்களை உங்கள் பேச்சை கேட்டு அஞ்சி ஓட வைக்காதீர்கள். வெறுப்போடு அமரவைத்து திணிக்காதீர்கள்.
தயவுகூர்ந்து, இந்த மலட்டுப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியை இங்கே வாசிக்காதீர்கள்.
இந்நாளிலாவது அவர்கள் மனதில் புதிதாய் நான்கு விதைகளை தூவுங்கள்.
ஒரு முதியவர் எப்போதும் தன் பையில் நல்ல விதைகளை வைத்துக்கொண்டே இருப்பாராம்.
எங்காவது வெற்றிடங்களைப் பார்க்க நேர்ந்தால்,
சில விதைகளை எடுத்துத் தூவி விடுவாராம்.
ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டால்,
இன்று வெறுமையாக இருக்கும் இந்த இடத்தில் நான் நல்விதைகளை தூவி விட்டேன்..
என்றாவது ஒருநாள் நல்மரங்கள் வேர்விட்டெழக் கூடும் என்பாராம்.
அதுபோலத்தான் குழந்தைகளாக இருக்கும் மாணவர்களின் மனமும். இன்று நீங்கள் விதைக்கும் எண்ணங்களே நாளை மனதில் வேர்பிடித்து வளரும்.
வெறுமனே பழங்கதை பேசாமல், உண்மை நிலையை உணர வையுங்கள். ஒரு நல்ல மனிதனாய் எப்படி வளரவேண்டும் என்று வழிகாட்டுங்கள்.
அதுவே நாட்டின் நல்ல எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்.
”வியாபாரம் செய்ய வந்தவர்கள்
அரசியல் நடத்தினார்கள்
அரசியல் நடத்த வந்தவர்கள்
வியாபாரம் செய்கிறார்கள்
இரண்டிலும் நட்டப்பட்டது மட்டும்
நாம்தானே இந்தியனே !”
என்ற வைரமுத்துவின் கவிதையையும் அவசியம் நினைவு கூறுங்கள். இனியாவது தேசியக்கொடி சுதந்திரமாய் பறக்கட்டும்.
இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் !
நேசிக்கப் பழகுவோம் !!!

0 comments:
Post a Comment