Saturday, August 15, 2015

நற்றிணைக் காதல் !


’நற்றிணை’ இலக்கியத்தில் இடம்பெற்றிருக்கும் அழகிய காட்சி இது.

வருணனைகளும், உவமைகளும் அற்புதமாய் அமைந்திருக்கிறது. படித்தவுடன் ஆசிரியரின் கற்பனைத்திறன் ஆச்சரியப்பட வைத்தது.

காதலி இருக்கும் இடம் தேடிக் காதலன் வந்தான். அவள் கரம் பற்றி மார்புறத் தழுவினான்.

அவளோ விடுபட்டு விலகி நின்றாள்.

ஏன் பெண்ணே விலகி நிற்கிறாய்? என்று காதலன் கேட்டதும், புன்னை மரத்தைக் காட்டினாள் காதலி.

‘நீ என்னிடமிருந்து விலகி நிற்பதற்கும், இந்த புன்னை மரத்திற்கும் என்ன சம்பந்தம்?’ என்றான் தலைவன்.

நான் சின்னஞ்சிறுமியாக இருந்தபோது இந்தச் சோலையில் புன்னைக் காய்களை மண்ணில் புதைத்து விளையாடினேன். அவற்றுள் ஒன்று செடியாக முளைத்தபோது நெய்யும் பாலும் ஊற்றி வளர்த்தேன். உன்னைபோன்றே வளரும் புன்னையும் எனக்கு இன்னொரு மகள்தான் என்றாள் தாய்.

தங்கை புன்னை மரமாகப் பக்கமிருந்து பார்க்கும்போது, இந்த நங்கை நாணமின்றி உங்களைத் தழுவி நிற்பதோ பண்பாடு? என்றாள் தலைவி.

சிறிய விசயம்தான். ஆனால் இதன் கலைநயமோ வியக்க வைக்கிறது.

  

நேசிக்கப் பழகுவோம் !!!


0 comments:

Post a Comment