Saturday, August 15, 2015

தேவைகளில் தெளிவு தேவை !


இன்று நாளுக்கு நாள் ஒவ்வொருவரின் தேவைகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன... இதில் நாம் சரியான தேவைகளைப் பூர்த்தி செய்கிறோமா என்பதில் அனைவருக்கும் தெளிவு தேவை..

சிந்தனையாளர் சாக்ரடீஸ் ஒவ்வொரு நாளும் கடைத்தெருவிற்கு சென்று, ஒவ்வொரு கடையிலும் உள்ள பொருள்களை உற்றுப் பார்ப்பாராம். ஆனால், அவர் எதையும் வாங்கியதில்லை.
ஒரு பொருளையும் வாங்காத நீங்கள் ஒவ்வொரு நாளும் கடைத்தெருவிற்கு வருவது ஏன்? என்று கடைக்காரன் ஒருவன் கேட்டபோது, ‘எவ்வளவு பொருள்கள் இல்லாமல் நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று அறிந்துகொள்ளவே அன்றாடம் வருகிறேன்’ என்று பதில் கூறினாராம் சாக்ரடீஸ்.

லண்டனில் பல்பொருள் அங்காடியை திறந்துவைக்க வேண்டும் என்று பெர்னாட்ஷா திறந்துவைக்க வேண்டும் என்று
அதன் உரிமையாளர் விரும்பி அழைத்தாராம்.
‘இந்த அங்காடியைத் திறந்துவைத்த நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’ என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ‘உலகில் எனக்கு அவசியமற்ற பொருள்கள் எத்தனை இருக்கின்றன என்பதை இங்கு வந்த பின்னரே அறிந்துகொண்டேன்’பேரறிஞர் பெர்னாட்ஷா.

கிரேக்கத் தத்துவஞானி டயோஜெனிஸ் உடைமைகளற்ற வாழ்வின் அர்த்தம் உணர்ந்தவர். ஒரே ஒரு கோப்பை மட்டும் அவருக்குச் சொந்தமாக இருந்தது. ஒரு நாள் ஆற்றங்கரை மணலில் அவர் படுத்திருந்தார். அப்போது ஒரு நாய் அங்கு வந்தது. ஆற்று நீரில் வாய் வைத்து அருந்தி அதன் தாகத்தைத் தீர்த்துக்கொண்டது. நாயின் செய்கையைப் பார்த்த டயோஜெனிஸ், தன்னிடமிருந்த கோப்பையை சுமையென்று உணர்ந்தார். அந்தக் கோப்பையை ஆற்றில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து நடந்தார்.

சாக்ரடீஸுக்கும், பெர்னாட்ஷாவுக்கும், டயோஜெனிஸுக்கும் புரிந்த வாழ்க்கை இரகசியம் நமக்குப் புரியவில்லையே?

நாம் அனைவரும் இவர்களைப்போல் வாழ முடியாதுதான். ஆனால் முடிந்தவரை முயற்சிக்கலாமே? தேவைகளை நெறிப்படுத்திக் கொள்ளலாமே.

ஒன்றிலிருந்து மற்றொன்று வித்தியாசமாகத்தான் இருக்கும். ஆனால் உலகில் அனைத்து வித்தியாசமான விஷயங்களிலும் நீந்திக் கரைசேர்தல் யாருக்கும் சாத்தியமில்லைதானே.

இல்லாதவற்றை அடைவதற்கு முயன்று இருப்பவற்றை அனுபவிக்காமல் இருந்துவிடக்கூடாது.  



நேசிக்கப் பழகுவோம் !

0 comments:

Post a Comment